புதுச்சேரி மாநிலத்தில் பெரிய கோவில் என அழைக்கப்படும் திருக்காமீஸ்வரர் கோயில் சோழர்கள் காலத்தில் உருவானதாகும் பழமைவாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் தேர்திருவிழா சிறப்பாக நடைபெறும். இதேபோல் இந்தாண்டு கடந்த 15-ஆம் தேதி பிடாரியம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து நேற்று இரவு சிவனடியார்கள், சிவாச்சாரியார்கள் மந்திரம் முழங்க பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடந்தது. நாள்தோறும் காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு வீதியுலாவும் நடக்கிறது. முக்கிய நிகழ்சியான 27-ஆம் தேதி பாரிவேட்டை, 29-ஆம் தேதி 63 நாயன்மார் வீதியுலா, 31-ஆம் தேதி இரவு திருக்கல்யாணம் நடக்கிறது. வருகிற 1-ஆம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. ஆளுநர் தமிழிசை தேரோட்டத்தை தொடங்கி வைக்கிறார். விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி திருவரசன் தலைமையில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *