புதுச்சேரி மாநில தி.மு.க செயற்குழு கூட்டம் லப்போர்த் வீதியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார் தலைமை வகித்தார். அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. பேசினார். கூட்டத்தில் துணை அமைப்பாளர்கள் அனி பால்கென்னடி எம்.எல்.ஏ., தைரியநாதன், கல்யாணி கிருஷ்ணன், பொருளாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., சம்பத் எம்.எல்.ஏ, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் திருநாவுக்கரசு, லோகையன், ஆறுமுகம், அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, சோமசுந்தரம், தங்கவேலு, செல்வநாதன், கோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை புதுச்சேரியில் வருகிற 3-ஆம் தேதி சிறப்பாக கொண்டாடுவது வட சென்னையில் அன்று நடைபெறும் கருணாநிதி நூற்றாண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டத்தில் திரளாக பங்கேற்பது. புதுச்சேரியிலும் கருணாநிதி நூற்றாண்டுவிழாவை ஓராண்டு கொண்டாடுவது. கலைஞர் அறிவாலயம் கட்டும் பணிகளை இந்த ஆண்டு தொடங்குவது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.