அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சரந்தாங்கி கிராமத்தில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1348வது சதய விழாவையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, கலந்து கொண்டு மாலையை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அருகில் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், திமுக மாவட்ட அவை தலைவர் பாலசுப்ரமணியன், கிழக்கு ஒன்றிய செயலாளர் தன்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், நகர செயலாளர் மனோகர வேல்பாண்டியன், அலங்காநல்லூர் பேரூராட்சி சேர்மன் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், வலையபட்டி ஒன்றிய கவுன்சிலர் பவானிதனசேகரன், ஆனையூர் பகுதி செயலாளர் மருதுபாண்டியன், கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சந்தனகருப்பு, மேற்கு ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் பிரதாப், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தண்டலை தவசதீஷ், காங்கிரஸ் கட்சி சார்பில் மனித உரிமை வட்டாரத் தலைவர் சரந்தாங்கி முத்து, ஒப்பந்தகாரர் பெரிச்சி, உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வீரபேரரசர் முத்தரையர் முன்னேற்ற சங்க மாநிலத் துணைத் தலைவர் வலசை கார்த்திக் ராயர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இவருடன் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *