கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் திட்ட விளக்க பயிற்சி கூட்டம் மாண்புமிகு மேயர் கல்பனா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கோயம்புத்தூர் மாநகராட்சி ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவி குறித்தான திட்ட விளக்க பயிற்சிமூலம் மேற்கொள்ளப்படும்
பாதாள சாக்கடைத் திட்டம்.ADB – GIAC நிபுணர் குழு மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குநகரம், சென்னை. ஆகியவை மூலம் நடந்தது.கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன், மாநகராட்சியுடன் புதியதாக இணைக்கப்பட்டுள்ள குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இத்திட்டப் பணிகள் தொடர்பான தொழில் நுட்பம் மற்றும் பயன்பாடுகளை குறித்து அறியும் வண்ணம் பயிற்சி கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்
மண்டல தலைவர்கள், நிலைக் குழு தலைவர்கள் மற்றும்
அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் கோவை மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்