கள்ளக்குறிச்சி வட்டம், புதுஉச்சிமேடு கோ.பட்டி கொங்கராப்பாளையம் பகுதியை சார்ந்த ஆதரவற்ற மற்றும் இரண்டு கால்கள் பாதித்து தவழும் நிலையில் உள்ள மாற்றுத்திறனாளி பெ.சுமதி என்பவர்க்கும் சங்கராபுரம் வட்டம் தெரசா மாற்றுத்திறனாளிகள் நல சங்கம், மற்றும் கள்ளக்குறிச்சி மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சேர்ந்து மாற்றுத்திறனாளி தம்பதியர்க்கு வடபூண்டி கைலாயநாதர் திருக்கோவிலில் திருமணம் நடைபெற்றது
திருமணம் செய்து கொண்ட மாற்றுத்திறனாளி தம்பதியினருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வாழ்த்து தெரிவித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து உடனடியாக புதிய வீட்டுமனை பட்டா மானியக் கடனுதவி திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கிடவும் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணி, மாற்றுத்திறனாளிகள் நல சங்க உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.