தென்காசி மாவட்டம்
சுரண்டையில் தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் முதியோர் உதவி எண் குறித்த விழிப்புணர்வு
நிகழ்ச்சி சுரண்டை ஒய்எம்சிஏ தலைவர் பாலச்சந்திரன் தலைமையில் நடந்தது.
செய்தி தொடர்பாளர் ராஜ்குமார் வரவேற்றார்
மாவட்ட கள பொறுப்பு அலுவலர் அமுதா முதியோருக்கான உதவி எண் குறித்தும் உதவி திட்டங்கள் குறித்து விளக்கினார்.
மன்னா டிரஸ்ட் செல்வகுமார் அரசின் உதவியை பெறுவது குறித்து பேசினார். அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள் சுப்பையா, கண்ணன், குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்