சத்தியமங்கலம் பவானிசாகர் அடுத்த அண்ணா நகரில் அமைந்துள்ளது மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு கதிர் பெருமாள் சுவாமி கோயில். ஆலயத்தில் ஸ்ரீ கதிர் பெருமாள் சுவாமி மற்றும் மகாலட்சுமி, பெண் தெய்வம் வீரமாஸ்தி அம்மன், ஸ்ரீ ஆஞ்சநேயர் ,ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ ஹயக் ஃபீவர் மற்றும் பரிவார தெய்வங்களின் ஆலயம் புணரமைத்து மகா
கும்பாபிஷேக விழா அதிகாலை யாகபூஜையுடன் தொடங்கி காலை 9 மணி மூலவர் ஸ்ரீ கதிர் பெருமாள் கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் சுமார் 10,000 க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அதனை தொடர்ந்து கோயில் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இவ்விழா ஆலயத்தின் நிர்வாக குழு தலைவர் எஸ்.ஆர். பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.