ஆவடி காவல் ஆணையரக செங்குன்றம் காவல் மாவட்டம் துணை ஆணையாளர் டாக்டர்.கே.எஸ்.பல்லாகிருஷ்ணன் மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் உள்ள அலுவலகத்தில் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
ரவுடிகள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுபவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கவும் போதை பொருள் தடுப்பு குறித்தும் புகார் அளிக்க வரும் பொது மக்களிடம் முகம் சுளிக்காத வண்ணம் அவர்களது புகாரை பெற்றுக் கொண்டு காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை மேற்கொள்ளவும் காவல் நிலையங்களில் பெறப்பட்டுள்ள தேக்கமடைந்த அனைத்து குற்ற ஆவணங்களின் மீது உடனடியாக தீர்வு காணவும் அனைத்து காவல் ஆளினர்களுக்கும் அறிவுரை மேலும் பொதுமக்கள் தன்னுடைய அலைபேசிக்கு எந்த நேரத்திலும் தொடர்பு கொண்டு பேசலாம் எனவும் 94878 7100. என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.