மாதவரம் வடக்கு பகுதி திமுக வின் சார்பில் வடபெரும்பாக்கம் 17 வது வட்டத்தில் ஆணழகன் போட்டி நடைபெற்றது

இளைஞரணி துணை அமைப்பாளர் எம் . என். அஜய் தென்னவன் ஏற்பாட்டில் ஆர் .எம் .டி உடற்பயிற்சி கூடத்தின் மேலாண்மை இயக்குனர் மோகன்ராஜ் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை ,திருவள்ளூர் ,காஞ்சிபுரம் ,திருச்சி, மதுரை, வேலூர் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 350-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு தங்களது கட்டுமஸ்தான உடல் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் சான்றிதழ் மற்றும் மெடல்களை பகுதி செயலாளர் புழல் நாராயணன் வழங்கினார்.

இதில் வட்டச் செயலாளர் கே கருணாகரன் கா தாமரைச்செல்வன் வட பெரும்பாக்கம் என் நாகராஜன் டாக்டர் எம் மைக்கேல் பி செந்தில் காஜாமஸ்தான் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *