அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரியஇலந்தைகுளம் கிராமத்தில் 24 மனை தெலுங்குபட்டி செட்டி உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு
ஸ்ரீ செல்வவிநாயகர், ஸ்ரீசாத்தவுராயன்,
ஸ்ரீமாசானகருப்பசாமி, ஆகிய தெய்வங்களுக்கு வைகாசி மாத பொங்கல் உற்சவ விழா நடைபெற்றது. தொடர்ந்து வான வேடிக்கை மேளதாளங்களும் முழங்க சாமிக்கு பழக்கூடை எடுத்துவரப்பட்டது.
நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வாக பால்குடம் எடுத்தல் பொங்கல் பானை அழைத்துச் செல்லுதல் மற்றும் விளக்கு பூஜையும் நடைபெற்றது. சக்தி கிடா வெட்டுதல் தொடர்ந்து சுவாமிக்கு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கலந்து கொண்டனர் விழா ஏற்பாடுகளை பெரிய இலந்தைகுளம் 24 மனை தெலுங்கு பட்டி செட்டி உறவின்முறை சமுதாய மக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.