மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சிதம்பரம் செல்லும் நெடுஞ்சாலையில் அரியா பிள்ளை குளம் உள்ளது. இந்தக் குளம் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ1கோடியே 11 லட்சம் மதிப்பீட்டில் நடைபாதையுடன் சீரமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளை மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணிகள் இயக்குனருமான அமுதவல்லி மற்றும் மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரிடம் அறிவுறுத்தினார். அதன் பின்னர் வைத்தீஸ்வரன் கோவில் தனியார் விடுதியில் நடைபெற்ற வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வர்த்தக துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள வர்த்தக தொடர்பு பணி மனையினை மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் விவசாயிகள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பாரம்பரிய அரிசி, பனையினால் செய்யப்பட்ட தின்பண்டங்கள், இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட எண்ணெய் வகைகள் மற்றும் சிறுதானிய வகைகளை காட்சிப்படுத்தப்பட்டதை பார்வையிட்டனர்.பயிற்சியில் பங்கு பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்

இந்த வர்த்தக தொடர்பு பணிமனை பயிற்சியில் வேளாண்துறை கால்நடைத்துறை வணிகத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *