சோழவந்தான்
சோழவந்தான் அருகே மேலக்கால் கண்மாய் மறுகால் வடியும் இடத்தில் கட்டப்பட்டு ஓராண்டு கூட முடிவடையாத தரைப்பாலம் விரிசலடைந்து கிடக்கிறது. இதனால் மக்களின் வரிப்பணத்தை வீணாகி விடும் அவலத்தில் உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.
இப்பகுதியில் கடந்த 2022ல் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 12.11 லட்சம் மதிப்பீட்டில் மறுகால் தரைப்பாலம் கட்டப்பட்டது.
இதையடுத்து இப்பாலத்தில் இருந்து பாசன நீர் வடியும் இடத்தில் கட்டப்பட்ட பரப்பு சறுக்கல் சிமெண்ட் விரிசலடைந்து சேதமாகி விட்டது. இதனால் இனிவரும் காலங்களில் பொழியும் மழையால் நீர்வரத்து அதிகரிக்கும். அப்போது இச்சுவர்களின் மீது விரிசல் ஏற்பட்டு அரிப்பு ஏற்படும் அபாயத்தில் உள்ளது .