விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதி சித்தணி கிராமத்தில் மயிலம் மத்திய ஒன்றிய திமுக இளைஞர் அணி சார்பில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மயிலம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கோ. செழியன் தலைமை தாங்கினார்.ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் தழுதாளி கார்த்திகேயன் வரவேற்றார்.மயிலம் தெற்கு ஒன்றிய செயலாளரும் தீர்மானக் குழு உறுப்பினருமான வழக்கறிஞர் சேதுநாதன் ,மாநில தீர்மானக் குழு துணை தலைவர் டாக்டர் மாசிலாமணி,மாவட்ட அமைத்தலைவர் டாக்டர் சேகர்,மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் K.S. அன்சாரி முன்னிலை வகித்தனர்.திமுக தலைமை கழக பேச்சாளர் பொன்னி வளவன் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனைகள் குறித்து பொதுமக்களிடம் சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த் ,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராமமூர்த்தி,ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சங்கர், பொன்வேல்,திமுக நிர்வாகிகள் ஏழுமலை மாரியப்பன் தட்சிணாமூர்த்தி, ஆறுமுகம், சிவகாமி, ராஜா,முனியன், ஆண்டாள் உட்பட மயிலம் மத்திய ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *