ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியில் ரசிகர் பட்டாளங்களை அதிகம் கொண்ட அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருந்து வருகிறது.தோனி தலைமையில் அதிக இறுதி போட்டிகளில் கலந்து கொண்ட அணி என்ற பெருமையை கொண்ட சி.எஸ்.கே.நாளை நடைபெற உள்ள இறுதி போட்டியில் விளையாட உள்ளது.இந்நிலையில் ஐ.டி.சி சன் ஃபீஸ்ட் சூப்பர் மில்க் பிஸ்கட் சார்பாக சி.எஸ்.கே.அணியை வாழ்த்தும் விதமாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் பேரணி நடைபெற்றது…
“Strongaa whistle Podu” என்ற விளம்பரத்தில் இருந்து CSK-அணி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விசில் போடு ஆர்மியாக மஞ்சள் வண்ணம் ஆடை அணிந்த சிஎஸ்கே ரசிகர்களின் விசில் போடு பேரணி நடைபெற்றது… இதில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் சிஎஸ்கே அணிக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.