மதுரை பெத்தானியாபுரம் பாத்திமா நகர் புனித பாத்திமா அன்னை ஆலய திருவிழா கடந்த 19 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று மதுரை லயோலா டெக்னிக்கல் பள்ளி அருட்தந்தை சேவியர் ஆண்டனி தலைமையில் மற்றும் பங்குத்தந்தை ஜெயராஜ் ஆகியோர் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினர்.
திருப்பலியை தொடர்ந்து பாத்திமா அன்னை உருவம் தாங்கிய தேர்ப்பவனி நடைபெற்றது. பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதி போன்ற முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக ஆலயத்தை வந்தடைந்தது. இறுதி நிகழ்வாக இன்று மாலை சிறப்புத் திருப்பலி நிறைவேற்றப்பட்டு கொடி இறக்கம் செய்யப்படுகிறது.