டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலையில் திறந்து வைத்தார். புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் தமிழ் நாட்டில் தயாரான செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. வெகு விமரிசையாக நடைபெற்ற பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சி குறித்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிரதமரை பாராட்டி ‘டுவிட்டரில்’ பதிவிட்டு இருப்பதாவது:- நமது தேசத்தின் ஒளிமயமான கடந்த காலத்தையும், எழுச்சிமிக்க நிகழ் காலத்தையும், பிரகாசமான எதிர் காலத்தையும், பிரதி பலிக்கும் நமது புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் வரலாற்று சிறப்புமிக்க திறப்பு விழாவில் உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் அன்பான நல்வாழ்த்துக்கள். புனித செங்கோலை அதிகாரமாற்ற கலாசாரம் மற்றும் சுதந்திரத்தின் அடையாளமாகவும், நியாயமான ஆளுகையை தொடர்ந்து நினைவூட்டவும், பாராளுமன்றத்தில் அதற்குரிய இடத்தில் வைப்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும்.

இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தேசம் என்றும் நன்றியுடன் இருக்கும். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார். புதிய பாராளுமன்றம் தேசத்திற்கு பெருமை அளிப்பதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியும் பாராட்டி உள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *