காரைக்கால் அருகே திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்க ணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கண க்கான பக்தர்களும வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இத்த கைய சிறப்புவாய்ந்த சனீ ஸ்வரர் கோவிலில், வருகிற டிசம்பர் 20-ந் தேதி, 2 1/3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. இதற்காக, மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் உரிய ஏற்பாடு களை செய்து வருகிறது. மேலும், கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் பிர மோற்சவ விழாவும் நடை பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வருகிற 30-ந் தேதி தேரோட்டம் நிகழ்ச்சியும், ஜூன் 1-ந் தேதி தெப்போற்சவ நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்நிலையில், காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோ த்துங்கன் நேற்று பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் கோவி லுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, பக்த ர்கள் செல்லும் வரிசை வளாகம், அவர்களுக்கான, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து, சனீஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கு எளிதான தரிசனம் கிடைக்க கோவில் நிர்வாகத்திடம் ஆலோசனை வழங்கினார். மேலும், பக்தர்களுக்கான பிரசாதம் தயாரிக்கும் இடத்தை, தூய்மையாக பராமரிக்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர் குலோ த்துங்கன் அறிவுறு த்தினார். இந்த ஆய்வின் போது, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமி கள், கோவில் மேஜேனர் ஸ்ரீநிவாசன் மற்றும் ஊழி யர்கள் உடன் இரு ந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *