புதுச்சேரி வன்னியர்கள் சமுதாய வளர்ச்சி இயக்கம் சார்பாக முப்பெரும் விழா புதுச்சேரி பாக்குமுடையான் பேட் பார்வதி திருமண மண்டபத்தில்நடைபெற்றது.
இதில் பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரிடபிள் சொசைட்டி செய்யும் சமுதாய பணியான தமிழரின் பண்பாடு,கலாச்சார கலந்த வாழ்வியல் சார்ந்த பனை மரத்தை மீட்கும் முயற்சியை பாராட்டி “கவிச்சங்கம் அர்த்த நாரீசவர்மா விருது” வழங்கி சிறப்பித்தனர், விருதினை வன்னியர் வளர்ச்சி இயக்க தலைவர் மணி கவுண்டர் தலைமையில் நிர்வாகிகள் பூரணாங்குப்பம் ஆனந்தன் அவர்களிடம் வழங்கினார்கள் இதில் வன்னியர் வளர்ச்சி இயக்க நிர்வாகிகள் பங்கு பெற்றனர்.