இரா.மோகன்,தரங்கம்பாடி, செய்தியாளர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்களாச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமத் சீதளா தேவி மாரியம்மன் கோவில் வைகாசி மாதம் தீமிதி திருவிழா மற்றும் தேரோட்டம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது
கடந்த 14 ஆம் தேதி புஷ்பா அபிஷேகத்துடன் தொடங்கிய பிறம்மோற்சவத்தின் முக்கிய விழாவான தீமிதி திருவிழா மற்றும் தேரோட்டம் இன்று நடைபெற்றது. கோவின் எதிரே அமைக்கப்பட்ட தீக்குண்டம் அருகே ஸ்ரீமத் சீதளா தேவி மாரியம்மன் எழுந்தருளி காட்சியளிக்க குளக்கரையில் இருந்து சக்தி கரகம் புறப்பட்டு விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் மஞ்சள் உடை உடுத்தியும் காவடி ஏந்தியும் ஊர்வலமாக வந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் வழிபாடு செய்தனர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி காட்சி அளிக்க தேர் வீதி உலாவும் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.