விழுப்புரம் வடக்கு மாவட்டம் மரக்காணம் மத்திய ஒன்றியத்தில் சிறுவாடி கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஒன்றிய தலைவர் சுந்தர் தலைமையில் ஒன்றிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது..
இந்த செயற்குழு கூட்டத்திற்கு முன்னூர் ஜெயராமன் மரக்காணம் மத்திய ஒன்றிய பொதுச் செயலாளர் வரவேற்பு உரை ஆற்றினார்..
பட்டியல் அணி மாவட்ட துணை தலைவர் மணிகண்டன் மற்றும் சாந்த சீலன் மற்றும் முன்னிலை வகித்தனர்..
இந்த செயற்குழு கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மணிவண்ணன் மற்றும் மகளிர் அணி விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் அருள் அரசி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்..
இந்த செயற்குழு கூட்டத்தில்
- முறுக்கேறி சிறுவாடி கடை தெருவில் கொலைவெறி தாக்குதல் நடத்திய நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்..
2 மரக்காணம் வட்டம் அரியந்தாங்கல் கிராமத்தில் நாடக மேடை சாலை வசதி ரேஷன் கடை இது போன்ற எந்த வித அடிப்படை வசதியும் இல்லாமல் வெறும் கிராமம் மட்டுமே காட்சியளிக்கிறது இவற்றை உடனடியாக சரி செய்து தர வலியுறுத்தல்..
3 மரக்காணம் வட்டம் நடுக்குப்பம் கிராமத்தில் சாலை வசதி இல்லாமல் இருக்கிறது இவற்றை உடனடியாக சரி செய்து தர வலியுறுத்தல்.
4 மரக்காணம் வட்டம் முறுக்கேறி சிறுவாடி உள்ளிட்ட கிராமங்களில் குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர் இவற்றை கண்டித்து தீர்மானம்..
5 மரக்காணம் வட்டம் ஆடவள்ளி குத்தான் கிராமத்தில் குடிநீர் வசதி இல்லாமல் பகுதி மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்..
இவைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..💥💐