டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா-வில் பழங்குடி இனத்தை சேர்ந்த “இந்தியாவின் முதல் குடிமகள்” குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களை புறக்கணித்து அவமதிப்பு செய்த மத்திய பாஜக அரசை கண்டித்துதென்காசி மாவட்ட காங்கிரஸ் பட்டியல் அணி (எஸ்ஸி.எஸ்டி) சார்பில் தென்காசி அருகே உள்ள நன்னகரம் “சட்டமேதை” டாக்டர்.அம்பேத்கர் சிலை முன்பு தென்காசி மாவட்ட பட்டியல் அணி பிரிவு தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தென்காசி சட்டமன்ற உறுப்பினரும், தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான உயர்திரு.பழனி நாடார் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இந்நிகழ்வில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் டாக்டர்.சங்கரக்குமார், தென்காசி மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் திரு.உதயகிருஷ்ணன், தென்காசி மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி திருமதி.சேர்மக்கனி மற்றும் மாவட்ட, வட்டார, நகராட்சி, பேரூராட்சி, கிராம காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் “கருப்பு பட்டை” அணிந்து கலந்து கொண்டனர்.