உளுந்தூர்பேட்டை
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் 500-க்கும் மேற்பட்ட ஏழை எளிய ஆதரவற்ற முதியோர்களுக்கு மதிய உணவினை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் மோகன் தலைமையில் நடைபெற்றது இதில் நகர தலைவர் பாரதிராஜா, ஒன்றிய இளைஞர் அணி தலைவர் விஜய்செல்வா, இளைஞரணி செயலாளர் சந்துரு,பொருளாளர் அஜய்குமார்,அன்பு, தர்மராஜ் ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள் தளபதி தினேஷ்,பரத்ராஜ், விக்னேஷ்,மோகன்ராஜ் திருநாவலூர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.