வேப்பூர் நாமக்கல் மாவட்டம்,
திருச்செங்கோடு வேலூர் ரோட்டை சேர்ந்தவர் கணேஷ் மகன் செந்தில்குமார் வயது 48,இவர் திருச்செங்கோடு வேலா ஸ்டீல் கம்பெனியில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார்
செந்தில்குமார், கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள கருப்பையா ஹார்டுவேஸ்ல் கடையில் தங்களது நிறுவனத்திற்கு சேர வேண்டிய1,63, 200 ரூபாய் பணத்தைகலெக்ஷன் செய்து கொண்டு இருசக்கர வாகனத்தில் திட்டக்குடி வேப்பூர் வழியாக விருத்தாச்சலம் சேலம் நெடுஞ்சாலையில் சிறுபாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அரசன்குடி காப்புக்காடு அருகே சென்று கொண்டிருந்த போது அவருக்கு பின்னால், இரண்டு இருசக்கர வாகனங்களில் அவரை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நான்கு நபர்கள், மேற்படி செந்தில்குமாரை கீழே தள்ளிவிட்டு அவரிடம் இருந்த பணம் மற்றும் சாம்சங் செல்போனை மிரட்டி பிடுங்கி சென்று விட்டனர்.
இந்நிலையில்அவர்கள் வந்த TN.57.AV.8567 என்ற எண்ணுள்ள யமஹா இருசக்கர வாகனம் அவசத்தில் , செல்ப் எடுக்காமல் நின்று விட்டது
அதனால் அந்த வண்டியை அங்கேயே விட்டுவிட்டு ஒரே வண்டியில் நான்கு பேரும் புறப்பட்டு சென்று விட்டனர்.
இது சம்பந்தமாக செந்தில்குமார் அளித்த தகவலின் பேரில் சிறுபாக்கம் அங்கு நின்ற இருசக்கர வாகனத்தை கைப்பற்றி பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து மேலும் விசாரணை
செய்து வருகின்றனர்.