கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
தஞ்சாவூர் மாவட்டம்
கும்பகோணம் அருகே காந்தி பூங்கா அருகில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள் கள்ளச்சாராய இறப்புகள் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ..
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையேற்று கண்டன உரையாற்றினர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம. ராமநாதன் , திருவிடைமருதூர் வடக்கு மாவட்ட ஒன்றிய செயலாளர் அசோக் குமார் , திருவிடைமருதூர் தெற்கு மாவட்ட ஒன்றிய செயலாளர் முத்து கண்ணன் மற்றும் திரளான அதிமுக தொண்டர்கள் பங்கேற்று கண்டன முழக்கமிட்டனர்.