வலங்கைமான் அருகில் லாயம் பகுதியில் வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பு சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு, நன்றி கூறினார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் மூலம் வழியோர கிராமங்கள் பயன்பெறும் விதமாக கூட்டு குடிநீர் திட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. இத்
திட்டத்திற்கு என கொள்ளிடம் ஆற்றில் இருந்து குடிநீர் சாலைகளின் மையப்பகுதியில் குழாய் பதித்து குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. குடிநீர் பைப் ஆனது பாபநாசம்-குடவாசல் சாலை வழியாக வலங்கைமானுக்கு வந்து பின்னர் கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் செல்கிறது. சாலையின் மைய பரப்பில் பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் பொருத்தப்பட்டுள்ள தால் சாலைகளில் செல்லும் கனரக வாகனங்களால், அவ்வப்போது கூட்டு குடிநீர் திட்ட குழாயில் சிறிய அளவில் விரிசல்
ஏற்பட்டு பெரிய அளவில் தண்ணீர் வெளியேறுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. வலங்கைமான்-பாபநாசம் சாலையில் மின்மாற்றி அலுவலகம் பகுதியில் இருந்து சந்திரசேகரபுரம் பூண்டி வரை சுமார் 3கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையை அகலப்படுத்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக
பல லட்ச ரூபாய் செலவில் புதுப்பித்தனர். இந்நிலையில் வலங்கைமான் அருகில் உள்ள லாயம் பகுதியில் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 2மாதங்களாக தண்ணீர் வெளியேறி வருகிறது. இதன் காரணமாக
குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பு சாலையில் பெரிய அளவில் பள்ளங்களை ஏற்படுத்தி விபத்துக்களை ஏற்படும் வகையில் உள்ளது. பல லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சாலைப் பகுதியில் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக சாலை பழுதடைந்து உரிய பயன்பாட்டினை மக்களுக்கு அளிகாமல் போனது. நூற்றுக்கணக்கான வாகனங்கள் வலங்கைமான்-கோவிந்தகுடி வழியாக செல்லும் நிலையில் தற்போது கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ள லாயம் பகுதியில் இருசக்கர வாகனங்கள் கூட செல்லுவது சிரமமாக உள்ளது. எனவே மேலும் காலதாமதம் இன்றி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையாக புகைப்படத்துடன் செய்தி
வெளியானது. இந்த செய்தியின் எதிரொலியாக வலங்கைமான் அருகில் உள்ள லாயம் பகுதியில் வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பு சரி செய்யும் பணி நடைப்பெற்றது. இதனால் பொதுமக்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.