பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே திருவைக்காவூர் ஊராட்சிக்குட உட்பட்ட கீழமாஞ்சேரி கிராமத்தின் சுற்றுப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்..
இதனால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது… இதனையடுத்து தகவல் அறிந்த பாபநாசம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுமதி கண்ணதாசன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) வரதராஜன், கபிஸ்தலம் காவல் ஆய்வாளர் அவர்கள்.. ஊராட்சி மன்ற தலைவர் விஜயன் கபிஸ்தலம் வருவாய் ஆய்வாளர் (பொறுப்பு).. மற்றும் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர்(பொறுப்பு) ஆகியோர் மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.. பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது மேலும் உடனடி நடிவடிக்கை எடுக்கப்பட்டு குடிநீர் பிரச்சனையை உடனடியாக சரிசெய்தனர்