தமிழ்நாடு முழுவதும் ஒளிவு மறைவற்ற ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவித்துவிட்டு தொடக்கக்கல்வித்துறையில் விதிகளுக்குப் புறம்பாகத் தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் நிர்வாக மாறுதல்களை எதிர்த்தும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் பதவி உயர்வுக் கலந்தாய்வு மற்றும் ஒன்றிய மாறுதல், மாவட்ட மாறுதல் கலந்தாய்வை நடத்தக் கோரியும், தமிழ்நாடு முழுவதும் கலந்தாய்வு மையங்களில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று.

கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்தில் ஓ.சி.பி.எம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், திருமங்கலம் மாவட்ட கல்வி அலுவலகத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஓ.சி.பி.எம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாநில செயற்குழு உறுப்பினர் சக்திவேல் தலைமை வைத்தார் கோரிக்கைகளை குறித்து மாவட்ட செயலாளர் சீனிவாசன் விளக்கி பேசினார். தோழமைச் சங்க நிர்வாகிகளான கார்த்திகேயன் ராஜரத்தினம் சந்திரன், கணேசன், நீதி ராஜா ரவிச்சந்திரன் ஆகியோர் வாழ்த்து பேசினர் மேலூர் வட்டார செயலாளர் சாலம்மாள் நன்றி கூறினார்.

திருமங்கலம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் சக்திவேல் தலைமை வைத்தார் கல்வி மாவட்ட தலைவர் இளங்குமரன் வரவேற்றார் கல்வி மாவட்ட செயலாளர் முருகேசன் முன்னிலை வைத்தார் கூட்டணியின் நிர்வாகிகளான பாண்டியன் ஜெயராஜ் வைரமணி மற்றும் ரமேஷ் ஆகியோர் கண்டனம் உரையாற்றினர்

ஆர்ப்பாட்ட விளக்க உரை குறித்து மாவட்ட செயலாளர் சீனிவாசன் பேசினார். ஆர்ப்பாட்டத்தின் நிறைவுறையாக மாநில செயலாளர் முருகன் நிறைவுரை ஆற்றினார். ஆர்ப்பாட்ட இறுதியில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஜோஸ்பின் நிர்மலா நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *