திருவாரூர் ரயில் நிலையம் முன்பாக விடியா திமுக அரசை கண்டித்து மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான இரா.காமராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின்போது முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசுகையில்…

திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது. ஒரு மாதத்தில் மட்டும் 25 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். திமுக அரசு புதிய திட்டங்களுக்கு நிதி ஏதும் ஒதுக்காமல் அதிமுக அரசு ஒதுக்கிய நிதிகளிலேயே திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த ஆட்சியில் கடுமையான விலைவாசி ஏற்றத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விரைவில் அதிமுக ஆட்சி வரவேண்டும் என அனைவரும் வேண்டிக்கொள்கிறார்கள். திமுக ஆட்சியில் ஊழல் பெருகி உள்ளது. தமிழக நிதி அமைச்சராக இருந்த பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் அண்மையில் இரண்டு ஆடியோ வெளியிட்டார்.

அதன் அடிப்படையில் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினும், மருமகன் சபரீசன் 30,000 கோடி ஊழலில் ஈடுபட்டுள்ளனர். அதை எப்படி மறைக்கப் போகிறார்கள் என பேசி இருந்தார். இதற்கு ஸ்டாலின் பதிலளிக்காமல் அவர் கூறிய குற்றச்சாட்டை உண்மை என்று நிரூபிக்கும் விதமாக அவரது துறையை மாற்றியுள்ளார் . இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மணல் திருட்டை தட்டிக்கேட்ட விஏஓ கொலை செய்யப்பட்டுள்ளார். வருவாய் ஆய்வாளர் தாக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்பு செயலாளர்கள் கோபால், சிவா ராஜமாணிக்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாப்பா சுப்ரமணியன்,மாவட்டஅம்மா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம் , மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் கலியபெருமாள் , மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் சின்னராஜ், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் ரயில் பாஸ்கர் , ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட அஇஅதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *