விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலம் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனைக்கூட்டம் மோழியனூரில் நடைபெற்றது.

மயிலம் தெற்கு ஒன்றிய செயலாளரும் மாநில தீர்மானக் குழு உறுப்பினருமான வழக்கறிஞர் சேது நாதன் தலைமையில்நடைபெற்ற இக்கூட்டத்தில் மயிலம் தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராமமூர்த்தி வரவேற்றார்.மாநில தீர்மானக் குழு துணைத் தலைவர் டாக்டர் மாசிலாமணி, மாவட்ட அவை தலைவர் டாக்டர் சேகர்,மயிலம் ஒன்றிய குழு பெருந்தலைவர் யோகேஸ்வரி மணிமாறன்,மாவட்டத் துணைச் செயலாளர் அருணகிரி மாவட்ட சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் அன்சாரி, முன்னிலை வகித்தனர்..திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனைகள் குறித்து திமுக தலைமைக் கழக பேச்சாளர் முரசொலி மூர்த்தி சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் திமுக ஒன்றிய உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் செ ண்டூர் ஊராட்சியை சேர்ந்த கிளை கழக நிர்வாகிகள், இளைஞர் அணி பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.நிறைவாக திமுக இளைஞர் அணி நிர்வாகி G.ராஜா நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *