பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியின் பயன்பாட்டிற்காக மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் எடுத்துச் செல்வதற்காக ஒரு வாகனம் வாங்குவதற்காக ரூபாய் பத்து லட்சம் ஒதுக்கீடு செய்திருந்தார். அந்த வாகனத்தை நேற்று புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
சட்டப்பேரவை வளாகத்தின் அருகில் இருக்கும் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் அலுவலகத்தின் எதிரே நடந்த நிகழ்ச்சியில் லாஸ்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் முன்னிலையில் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் வழங்கினார். இதில் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி இயக்குநர் டாக்டர் உதயசந்திரன், மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜோசப் ராஜேஷ் மற்றும் டிஆர்டிஏ செயற் பொறியாளர் பாலசுப்ரமணியன் மற்றும் நிர்வாகிகள் கொண்டார்கள்.