தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பொன்மான்மேய்ந்தநல்லூர் ஸ்ரீ பொன்னியம்மன் ஆலய 96-ம் ஆண்டு திருவிழா விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தினர்.
இத்திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இவ்விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.
இன்று ஏராளமான பக்தர்கள் பொன்மான் மேய்ந்தநல்லூர் கருவங் குளக்கரையிலிருந்து சக்தி கரகம்,பால்குடம், காவடி, எடுத்து முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக புறப்பட்டு பின்னர் ஆலயம் வந்தடைந்தனர் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபார்த்தனை செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர் வழிபட்டனர்.
விழா ஏற்பாடுகளை கிராமவாசிகள் மற்றும் நாட்டாமைகள் செய்திருந்தனர்.