எஸ்.செல்வகுமார் செய்தியாளர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பழையார் மீன்பிடி துறைமுகத்தில் 26.26 கோடி செலவில் பல்வேறு மேம்படுத்தப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது
இந்தப் பணிகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் ஆய்வு மேற்கொண்டார் பணியின் காலம் மற்றும் பணியினை தரத்துடன் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் மேலும் மீனவர்களிடம் குறைகளை கேட்டு அறிந்து பணியினை செம்மைப்படுத்திட உத்தரவிட்டார்
தொடர்ந்து மீனவர்களை சந்தித்து அவர்களது அடிப்படை தேவைகளை கேட்டு அறிந்தார் பழைய மீனவ கிராமத்தில் அடிப்படை தேவையான குடிநீர் சாலை மின்விளக்கு மற்றும் குடியிருப்பு வாசிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது
மாவட்ட ஆட்சியர் மகாபாரதி துறை சார்ந்த அதிகாரியிடம் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் தொடர்ந்து பழையாரில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பணியினை பாராட்டி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்
இந்த ஆய்வில் ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன் கொள்ளிடம் ஒன்றிய பெருந்தலைவர் ஜெயபிரகாஷ் உதவி மீன்வள இயக்குனர் ராஜேஷ் குமார் வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.