ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

திருவாரூர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருவாரூர் மாவட்டப் பொதுக்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் இரா.முருகேசன் தலைமை வைத்தார் மாநிலத் துணைச் செயலாளர் சி.ஜூலியஸ் மாநில மாவட்டப் பொருளாளர் ஆ.சுபாஷ் மாநில செயற்குழு உறுப்பினர்கள் இரா.கிருஷ்ணமூர்த்தி த.ஐயப்பன் உள்ளிட்டோர் முன்னிலை வைத்தனர்.

கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து மாவட்டச் செயலாளர் ஆர் ஈ வே ரா கருத்துரை வணங்கி பேசினார் அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் கீழ்க்கண்ட நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தமிழக அரசு ஊராட்சி ஒன்றிய, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது. இத்திட்டத்திற்கு சமையல் பணி மேற்கொள்ளுதல் மற்றும் உணவு பரிமாறும் பணிகளை பள்ளியின் சத்துணவு பணியாளர்களிடமே வழங்கி செயல்படுத்துவது மட்டுமே எளிதானதாக இருக்கும் எனவே இப்ப பணிகளை சத்துணவு பணியாளர்களிடமே ஒப்படைக்க வேண்டும் தொடக்க பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கு கடந்த ஓராண்டாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது மிகவும் குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் அளிக்கப்படாமல் உள்ளதால் பள்ளியின் சுகாதாரப் பணிகளை வெகுவாக பாதிக்கும் எனவே பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உடனடியாக ஊதியத்தை நிலுவைத் தொகையுடன் வழங்கிட வேண்டும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது முன்னதாக தொடக்கக்கல்வி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவராக இரா.முருகேசன் மாவட்ட செயலாளராக ஆர் ஈ வே ரா மாவட்டப் பொருளாளராக ஆ.சுபாஷ்மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக பாலசுப்பிரமணியன் தமிழ்வாணன் செல்வமணி மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் குழந்தைசாமி தேர்தல் ஆணையராக. முன்னின்று செயல்பட்டு தேர்தலை சிறப்பாக நடத்தினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *