அலங்காநல்லூர்,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர்
பேரூராட்சியின் சார்பில் அரசு விதிகளின் படி கழிவுநீர் கசடு அகற்றுவது தொடர்பான விழிப்புணர்வு பொதுமக்கள், மற்றும் தூய்மை பணியாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. தனியார் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் முறையை முற்றிலுமாக தவிர்க்கவும், கழிவுகளை செப்டிக் டேங்க் வாகனம் மூலம் மட்டுமே அகற்ற வேண்டும் என பொதுமக்கள் முன்னிலையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் விஷவாயு தாக்கி உயிர் சேதம் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு கழிவுகளை சாலையோரங்களில் கொட்டாமல் முறையாக அப்புறப்படுத்தவும் விழிப்புணர்வு செய்யப்பட்டது.
இதில் பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், செயல் அலுவலர் ஜூலான்பானு, துணை தலைவர் சுவாமிநாதன், மற்றும் வார்டு கவுன்சிலர்கள் உட்பட இளநிலை உதவியாளர் ராஜா, துப்புரவு மேற்பார்வையாளர் ரெங்கசாமி, பேரூராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், அலுவலர்கள், பொதுமக்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.