மதுரை மாவட்டம் , திருப்பரங்குன்றம் தாலுகா, பெருங்குடி ஊராட்சியில் 1960 ம் ஆண்டு துவங்கப்பட்ட சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் கடந்த 17 ஆண்டுகளாக முதல்வர் கண்ணன் பணியாற்றி இன்று ஓய்வு பெறுகிறார். கல்லூரி முதல்வர் கண்ணன் கடந்த 17 ஆண்டுகளாக கிராமப்புறங்களில் பள்ளி படிப்பை முடித்த ஏழை மாணவர்களுக்கு கல்லூரியில் பயில வாய்ப்புகள் வழங்கி இவரது அரவணைப்பில் மேற்படி கல்லூரியில் படித்த பல ஆயிரம் மாணவர்கள் இன்று உயர்ந்த பதவியில் இருக்கின்றனர். அப்படிப்பட்ட எளிய கல்லூரி முதல்வரை வி.சி.க. நிறுவனர் எம்.பி.தொல். திருமாவளவன் ஆசியுடன்விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கல்வி பொருளாதாரம் விழிப்புணர்வு இயக்க மாநில துணைச் செயலாளர் ஏ.ஆர்.அய்யங்காளையும்,திருப்பரங்குன்றம் முன்னாள் யூனியன் சேர்மனும் முன்னாள் மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை சேர்மனுமாகிய வழக்கறிஞர் முனியாண்டி ஆகியோர் பாராட்டு தெரிவித்து வாழ்த்தி பொன்னாடை அணிவித்தனர்.