சென்னை கொளத்தூர் செய்தியாளர்

சென்னை டிரைவர் சேவா கேந்தர் மற்றும் ஜல் சேவாதல் அமைப்பின் சார்பாக மாதவரம் ரவுண்டானா ஆந்திரா பஸ் நிறுத்தம் அருகில் உள்ள மாதவரம் லாரி நிறுத்தத்தில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

இதில் மாதவரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மாரிமுத்து, உதவி ஆய்வாளர் லோகநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு லாரி டிரைவர்கள், ஊழியர்கள், தொழிலாளர்களுக்கு மோர், பழ ஜூஸ், உணவு பொட்டலங்களை சுமார் 300 மேற்பட்டோருக்கு வழங்கினார்கள். இதில் நிர்வாகிகள் சுரேஷ்குமார் சர்மா, நவீன் குமார் சர்மா, வழக்கறிஞர் பர்வீன்குமார் சர்மா மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *