கோவை மாநகராட்சி 80வது வார்டு மாமன்ற உறுப்பினரும் பொது சுகாதார குழு தலைவருமான பெ.மாரிசெல்வன் அவர்கள் வார்டில் நடைபெறும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் பொது மக்களை நேரில் சந்தித்து தங்களுக்கு தேவையான பணிகள் வார்டில் நடைபெறுவதை எடுத்து கூறினார்.

பொது மக்கள் தூய்மை பணியாளர்களிடம் மக்கும், மக்காத குப்பைகள் பிரித்து தருவது குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.

வார்டில் ஆழ்குழாய் நீர் மோட்டார் மூலம் உப்பு நீர் விநியோகம் குறித்தும் பாதாளச்சாக்கடை, மற்றும் தினமும் தூய்மை பணிகள் நடைபெறுவது குறித்து பொது மக்கள் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மற்றும் மக்களின் அடிப்படை தேவைகளான பிரச்சினைகளை உடனுக்குடன் சரி செய்து தருமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது உதவி பொறியாளர் விமல் ராஜ், சுகாதார ஆய்வாளர் தனபால் சுகாதார மேற்பார்வையாளர் கமலக்கண்ணன் பெரியகடை வீதி பகுதி 2 துணை செயலாளர் முருகேசன் வார்டு செயலாளர் தங்கவேல் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *