பொன்னேரி
சென்னை வண்டலூர் அருகில் மேல கோட்டடையூர் நடை பெற்ற 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் கும்மி டிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்ப வரது மகன் எஸ்.உதீவு ஆசன் மாநில அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப் பூண்டி, மற்றும் திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் ஆர்.டி.எம். கிக் பாக்ஸ்இங் என்ற பெயரில் குத்து சண்டை பயிற்சி மையம் இயங்கி வருகிறது.இதில் ஏராளமானோர் குத்து சண்டை பயிற்சி பெற்று வருகின்றனர்.
இதில் பயிற்சி பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி ப்பெற்று வருகின்றனர் அதன்படி கும்டிப்பூண்டியில் உள்ள பயிற்சி மையத்தில் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஆத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கே சுரேஷ் என்பவருடைய மகன் எஸ். உதீவு ஆசன்,பயிற்சிபெற்றார் இப் பயிற்சி மையத்தின் பயிற்சியாள ராக ராஜேஷ் என்பவர் உள்ளார்.
இந் நிலையில் சென்னை அடுத்த வண்டலூரில் மாநில அளவிலான ஸ்டேட் வாக்கோஇந்தியா கிக் பாக்ஸிங் நடைபெற்றது.இதில் 700க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.
இதில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப் பாக்கம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருடைய மகன் எஸ்.உதீப்ஆசன் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்து தங்கப்பதத்தை வென்ரு. தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இப் போட்டியானது வாக்கோ இந்தியா பிரசிடெண்ட் தமிழ்நாடு.சுரேஷ் பாபு அவர்கள் முன்னிலையில் நடைபெற் றது. அதன்படி முதலிடம் பிடித்த எஸ்.உதீப்ஆசனுக்கு சுரேஷ் பாபு அவர்கள் தங்கப்பதக்கம் வழங்கினார்.
பதக்கம் வென்ற மாணவனுக்கு கிராமத்தில் பாராட்டி வரவேற்ற னர்.