மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாத ஊரில் திருமறைநாதர் வேதநாயகி அம்மன் தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் நேற்று பஞ்சமூர்த்திகள் ஊர்வலம் மற்றும் திருக்கல்யாணம் நடைபெற்றது
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மாங்கல்ய கயிறுகள் மாற்றி அம்மனை தரிசித்துச் சென்றனர் இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் ஆன்மீக சான்றோர்கள் இதில் திரளாக கலந்து கொண்டனர்