கோவையை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.பிரபு.காங்கிரஸ் கட்சி சார்பாக நீலகிரியில் இருந்து 5 முறை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்ட இவர், மறைந்த முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தி அமைச்சரவையில் மத்திய அரசின் ரசாயனம் மற்றும் உரங்கள் துறை, விவசாய அமைச்சகம் ஆகியவற்றில் மத்திய அமைச்சராக இருந்தவர்..கோவை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் இவரது பிறந்தநாளை .கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர்

வெகு விமரிசையாக கொண்டாடினர்.முன்னதாக கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் உமாபதி தலைமையில் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் கலந்து கொண்டு உணவு பொட்டலங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் கருப்புசாமி,மற்றும் நிர்வாகிகள் வீனஸ்மணி,சி.வி.சி.குருசாமி,தமிழ்மணி,காந்தகுமார்,வசந்த்,ஜேம்ஸ் குமார்,நட்ராஜ்,டென்னிஸ் செல்வராஜ்,கோட்டை செல்லப்பா,திலகவதி உட்பட பலர் கலந்து கொண்டனர்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *