கோவை மாநகராட்சி 80 வது வார்டுக்குட்பட்ட செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் நடைபெற்றுவரும் கூடுதல் வகுப்பறை கட்டும் பணி மற்றும் வகுப்பறைகளில் தரைத்தளம் டைல்ஸ் பதிக்கும் பணியினை கோவை மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் பெ.மாரிசெல்வன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் பள்ளிகள் திறக்கும் முன் டைல்ஸ் கொண்டு தரைத்தளம் அமைக்கும் பணியினை விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில்கோவை மாநகராட்சி உதவி பொறியாளர் விமல் ராஜ், சுகாதார ஆய்வாளர் தனபால், பெரியகடை வீதி பகுதி 1துணை செயலாளர் பழக்கடை முத்து முருகன், வார்டு செயலாளர் தங்கவேலன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், மாநகராட்சி அதிகாரிகள், கழக நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.