கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஆணை விழுந்தான்கேனி கிராமத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலகப் புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது இந்நிகழ்விற்கு தன்னார்வலர் மாலதி அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கந்தர்வக் கோட்டை வட்டாரத் தலைவர் ரகமதுல்லா பேசும்போது
உலக புகையிலை எதிர்ப்பு தினம், மே 31-ந் தேதி உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 1988-ம் ஆண்டு ஏப்ரல் 7-ந் தேதி முதன் முதலில் புகையிலை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. 1989-ம் ஆண்டு மே 31-ந் தேதிக்கு மாற்றப்பட்டது. புகையிலையினால் ஏற்படும் பாதிப்புகளை பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், புகையிலை அபாயங்களில் இருந்து மக்களை பாதுகாக்கவும், புகையிலை பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்தவும் இந்த நாள் மிகவும் உதவுகிறது. புகையிலைப் பொருட்களினால் ஒவ்வொரு ஆண்டும் 60 லட்சம் மக்கள் இறக்கின்றனர். இது 2030-ம் ஆண்டுக்குள் 80 லட்சமாக அதிகரிக்கும் என ஒரு தகவல் சொல்லுகிறது.
நுரையீரல், குரல்வளை, வாய், உணவுக்குழாய், தொண்டை, சிறுநீர்ப்பை, சிறுநீரகம், கல்லீரல், வயிறு, கணையம், பெருங்குடல் மற்றும் கருப்பை வாய் என பல வகையான புற்றுநோய்களுக்கு புகையிலை பயன்பாடு முக்கிய காரணமாக உள்ளது. புகையிலை மக்களிடையே பல்வேறு ஆபத்தான நோய்களை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் அவர்களின் உயிரிழப்புக்கும் காரணமாகிறது.உலக புகையிலை எதிர்ப்பு தினத்தில் பொதுமக்களிடையே புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பேசினார். நிறைவாக தன்னார்வலர் தனலட்சுமி நன்றி கூறினார்