சென்னை கொளத்தூர் செய்தியாளர்


கொளத்தூர் பூம்புகார் நகரில் உள்ள சர்வ சக்தி விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் திரவிய ஹோமங்கள் , யாத்திராதானம், கிரஹப்பிரித்தி,மஹா பூர்னாஹீதி தீப ஆராதனை, கடம் புறப்பாடு மேளதாளங்கள்,பஞ்சவாத்தியங்கள் முழங்க இராஜ கோபுரம் மற்றும் விமானங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்று பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.

அதன் பின்னர் பிரசாதங்கள் வழங்கப்பட்டு அன்னதானம் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வினாயகரின் அருளை பெற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை பூம்புகார் நகர் வினாயகர் ஆலய சேவா சங்கத்தின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.கொளத்தூர் காவல் உதவி கமிஷனர் சிவகுமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *