புதுச்சேரி ஆளநர் தமிழிசைக்கு இன்று பிறந்த நாள் வாழ்துக்களை பிரதமர் மோடி கடிதம் மூலம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:- பிறந்த நாள் என்பது மனித சமுதாயத்திற்கும், தேசிய விழுமியங்களுக்கும் அர்ப்பணித்துக் கொள்வதை மீண்டும் நினைவுபடுத்தும் ஒரு சிறப்பான சந்தர்ப்பம். இந்த விழுமியங்களை ஒன்றுபடுத்த சாமானியர்களின் எதிர்பார்ப்புகளை சமாளித்து நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது. கவர்னராக உங்களது அரசியல் சாசனக் கடமைகளை ஆற்றும் செயல்திறனும், கடமை உணர்வும், மாநிலத்தை மேலும் உயரத்திற்கு இட்டுச்செல்லும். சமுதாயத்திற்கும், மாநிலத்திற்கும், தேசத்திற்கும் நீங்கள் தொடர்ந்து அர்ப்பணிப்போடு சேவை செய்வீர்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. உங்களுக்கு நீண்ட ஆரோக்கியமான ஆயுளை வழங்கவும், தேச சேவையில் உங்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு மோடி கடிதத்தில் கூறியுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *