பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

திருக்கருகாவூர் ஸ்ரீ கர்ப்பகரட்சாம்பிகை அம்பாள் கோயிலில் வைகாசி விசாக பெருவிழாவை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் , பாபநாசம் அருகே அமைந்துள்ள திருக்கருகாவூர் ஸ்ரீ முல்லைவன நாதர் உடனுறை ஸ்ரீ கர்ப்பகரட்சாம்பிகை அம்பாள் கோயில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.வைகாசி விசாக பெருவிழாவை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.

ஸ்ரீ கர்ப்பகரட்சாம்பிகை அம்பாள்,முல்லைவனநாதர்,விநாயகர்,முருகன்,சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் கோயிலில் இருந்து புறப்பட்டு

திருக்கருக்காவூர் வெட்டாறு கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

அதைதொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அஸ்திரதேவருக்கு வெட்டாறு கரையில் பால், சந்தனம், மஞ்சள், பன்னீர், இளநீர், தயிர், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.

இதைதொடர்ந்து மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *