ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக முதல்வர் நவீன் பட்நாயக் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “நிலைமை குறித்து ஆய்வு செய்வதற்காக நாளை காலை நான் செல்லவிருக்கிறேன். தற்சமயம் எங்களுடைய முதல் கவலை என்னவென்றால், காயமடைந்து உயிருடன் இருப்பவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்ப்பதுதான். மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்தார்.