தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கஞ்சமேடு கிராமத்தில் ஸ்ரீ செல்லியம்மன் ஆலய 37-ம் ஆண்டு வைகாசி திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பால்குடம் அலகு காவடி எடுத்து வழிபாடு நடத்தினர்.
இவ்விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.
இன்று ஏராளமான பக்தர்கள் குடமுரட்டி ஆற்றங்கரையிலிருந்து சக்தி கரகம்,பால்குடம், அலகு காவடி, எடுத்து முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக புறப்பட்டு பின்னர் ஆலயம் வந்தடைந்தனர்.
தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபார்த்தனை செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர் வழிபட்டனர்.
விழா ஏற்பாடுகளை கிராமவாசிகள் மற்றும் நாட்டாமைகள் செய்திருந்தனர்.