நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகை வியாபாரிகள் நல அறக்கட்டளை சார்பில் மேற்கு வங்கத்திலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 100 க்கும் மேற்பட்டோர் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சிக்கு ராசிபுரம் நகை வியாபாரிகள் நல அறக்கட்டளை தலைவர் ஜெயபிரகாஷ் அவர்கள் தலைமையில் அனைத்து நகை கடை உரிமையாளர்களும்,ஆபரண தொழிலாளர்களும் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி பத்து நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்..

இந்நிகழ்ச்சியில் செயலாளர் ஹரி கிருஷ்ணன், பொருளாளர் பாஸ்கர் துணைத் தலைவர் நந்தலால், துணை செயலாளர் ஜெகன் சேட், செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன் செல்வகுமார், வினோத், நாசர், முன்னாள் தலைவர்கள் எஸ் தாஜ் முகமது, ஏ.என். மனோகரன, குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *