தமிழகத்தில் சிறந்த அரசியல்வாதி மற்றும் தமிழ் மொழிக்கு தொண்டு செய்தல், என பல சிறப்புகளைக் கொண்டு தமிழக முதலமைச்சராக பதவி வகித்து தமிழகத்தில் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தவர் டாக்டர் மு.கருணாநிதி அவர்கள்.
தற்போது தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை அடுத்துதமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் திமுக கட்சியின் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா (3.6.23) சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட ஆயில் பட்டி ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
கலைஞரின் நூற்றாண்டுவிழா ஆயில்பட்டி ஊராட்சியில் நாமக்கல்கிழக்கு மாவட்டசெயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார்,அவர்களின் ஆணைப்படியும்,வனத்துறைஅமைச்சர்மா.மதிவேந்தன், அவர்களின் ஆலோசனை படியும் ஆயில் பட்டி ஊராட்சியில் நடைபெற்றது.
இதில் ஆயில் பட்டி ஊராட்சி மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பிரகாசம், தலைமை வகித்தார். கிளை செயலாளர்கள் ஆர்.பாண்டியன்,ரவி கண்ணன், லட்சுமணன், முருகேசன்,பூபால்ராஜ் , வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் இனிப்பு வழங்கி கொடியேற்றி சிறப்பிக்கப்பட்டது .
மேலும் இந்த நிகழ்ச்சியில் திமுக கட்சியின்கிளைச் செயலாளர்கள், மற்றும் கழக நிர்வாகிகள் , பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..