மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் முன்னாள் முதல்வர் கலைஞர் 100வது பிறந்த நாளை முன்னிட்டு குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான காது மூக்கு தொண்டை இலவச மருத்துவ பரிசோதனை முகாம் மன்னார்குடி தனியார் பள்ளியில் நடைபெற்றது .

இதில் உலக புகழ் பெற்ற பத்மஸ்ரீ டாக்டர் மோகன் காமேஸ்வரன் மருத்துவ குழுவினர் பரிசோதனைகள் மேற்கொண்டு நோயாளிகளுக்கு உடல் நலம் குறித்து . விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் சிகிச்சை பெற்ற 75 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் காது கேளாததற்கான கருவி ரூபாய் 8 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டது . இதில் 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *